தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

  • அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.

  • அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

  • அகல இருந்தால் பகையும் உறவாம்.

  • அகல உழுகிறதை விட ஆழ உழு.

  • அகல் வட்டம் பகல் மழை.

  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.

  • அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.

  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.

  • அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.

  • அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.

  • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.

  • அக்காளைப் பழித்து தங்கச்சி மோசம் போனாள்.

  • அக்காளோடு போயிற்று அத்தான் உறவு.

  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.

  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.

  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

  • அடாது செய்தவன் படாது படுவான்.

  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்

  • அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்

  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

  • அடியாத மாடு படியாது.

  • அடிக்கிற கைதான் அணைக்கும்!

  • அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.

  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

  • அஷ்ட பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்

  • அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.

  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

  • அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !

  • அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.

  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்.

    • இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
  • அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.

    • அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
  • அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.

  • அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..

  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

  • அந்தி மழை அழுதாலும் விடாது.

  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

  • அப்பனே மட்டையப் பிடிச்சு தொங்கிகிட்டு இருந்தானாம், பையன் நல்ல நெத்துக்காயா போடச் சொன்னானாம்.

  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

  • அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

  • அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?

  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

  • அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

( மேற்கண்ட பழமொழி 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு)

  • அருமை சிந்தை, அற்புதம் செய்யும்.

  • அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.

  • அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது.

  • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்

  • அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல

  • குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து

  • அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.

  • அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.

  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

  • அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.

  • அரியும் சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயிலே மண்ணு.

  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

  • அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

  • அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)

  • அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.

  • அரைக்கிணறு தாண்டினாற் போல/அரைக்கிணறு தாண்டாதே!

  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.

  • அரைப்பணம் குடுத்து அழச்சொன்னங்களாம், ஒருப்பணம் கொடுத்து ஓயச்சொன்னாங்கலாம்.

  • அரைக் குடம் தளும்பும், நிறைக் குடம் தளும்பாது.

  • அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.

  • அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?

  • அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.

  • அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.

  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.

  • அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே.

  • அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.

  • அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும்?

  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.

  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.

  • அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.

  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.

  • அவனவன் செய்த வினை அவனவனுக்கு.

  • அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!

  • அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?

  • அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.

  • அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.

  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.

  • அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.

  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

  • அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.

  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.

  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

  • அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.

  • அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.

  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

  • அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.

  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

  • அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி

  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

  • அறச் செட்டு முழு நட்டம்.

  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

  • அற நனெஞ்சவனுக்கு குளிரென்ன கூதலென்ன?

  • அற முறுக்குனா அத்துப் போகும்.

  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

  • அறிய அறியக் கெடுவார் உண்டா?

  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

  • அறிவீனனிடம் புத்தி கேட்காதே.

  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

  • அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.

  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

  • அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அரிவாளாம்!

  • அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?

  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.

  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.

  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.

  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

  • அற்றது பற்றெனில் உற்றது வீடு.

  • அனுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்

  • ஒருவன் செய்த தீவினைகளின் (பாவங்களின்) விளைவுகளை அனுபவித்து அவை நீங்கப்பெற்றால்தான்/ஒருவன் தன் வக்கிரமமான, இயற்கைக்குப் புறம்பான, காமவெறிச்செயல்களை விட்டொழித்தால்தான், எந்நோய்க்கும் உட்கொள்ளும் மருந்துகள் வேலைசெய்து நற்பலனளிக்கும் என்பது அர்த்தமாகும்

  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

  • அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.

  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

  • அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை

  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

  • அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.

  • அடுக்களை குற்றம் சோறு குழைந்தது

  • அளந்த வ்ல்லம் அட்டாலியிலே

  • அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது.


Make a Free Website with Yola.