ஆ
-
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
-
பொறுமை மிக அவசியம்
-
ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
-
ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
-
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
-
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
-
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
-
ஆசை வெட்கம் அறியாது.
-
ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools.
-
ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!
-
ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?
-
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
-
ஆடிப் பட்டம் தேடி விதை.
-
ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
-
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
-
ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
-
ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
-
ஆடு கடிக்குமுனு அறைக்குள்ள படுத்தவ, அவுசாரியாப் போக பேயாய் அலைஞ்சாலாம்.
-
ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
-
ஆடு பகையாம் குட்டி உறவாம்.
-
ஆடு வளர்க்றது அழகு பாக்றத்துக்கு இல்லெ, கோழி வளக்குறது கொஞ்சு பாக்றதுக்கு இல்லெ.
-
ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
-
ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
-
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
-
ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
-
ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
-
இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
-
ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
-
ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்?
-
ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
-
ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம்.
-
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
-
ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்கக்கூடாது.
-
ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா.
-
ஆபத்திற்குக் குற்றம் (தோஷம்) இல்லை!
-
ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
-
ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
-
ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
- இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
-
ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
- மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
-
ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
-
ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்து தீனி வாங்க முடியலையாம்!
-
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
-
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
-
ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
-
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
-
ஆரால் கேடு, வாயால் கேடு.
-
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
-
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
-
ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
-
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
-
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
-
ஆழமறியாமல் காலை இடாதே.
-
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!
-
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
-
ஆள் கூடுனா பாம்பு சாகுமா?
-
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
-
ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
-
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
-
ஆள் பாதி, ஆடை பாதி.
-
ஆளப்பாத்து ஆசனம் போடு, பல்லைப்பாத்து பாக்குப்போடு.
-
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
-
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
-
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
-
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
-
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
-
ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
-
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
-
ஆறு பெண்ணைப் பெத்தால் அரசனும் ஆண்டியாவான்!
-
ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
-
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
-
ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
-
ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம்.
-
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
-
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
-
ஆனைக்கும் அடி சறுக்கும்.
-
ஆனைக்கு கோவணம் கட்டு-(ரதைப்)-வதைப்போல...
-
செய்வதற்குக் கடினமான/முடியாத வேலையைப்பற்றிக் குறிப்பிடும்போது சொல்லப்படும் வார்த்தைகள்
-
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
-
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
-
ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
-
ஆனைப் பசிக்கு சோளப் பொரி
-
ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
-
ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
-
ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
-
ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
-
ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
-
ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
-
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
-
ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா?
இ
-
இக்கரைக்கு அக்கரை பச்சை.
-
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
-
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
-
இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.
-
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி....
-
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
-
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிங்கிய கதையாக.....
-
இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு.
-
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
-
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
-
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
-
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
-
இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
-
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
-
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
-
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, இராச திசையில் கெட்டவனுமில்லை
-
இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.
-
இருக்க எடம் கொடுத்த படுக்க பாய் கேப்பான்.
-
இருக்குறவ அள்ளி முடியறா.
-
இருட்டுக்கு முந்தி இரவு உணவு.
-
இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை?
-
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
-
இரும்பூறல் காணாமல் இரும்பிச் செத்தான்.
-
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
-
இருவர் நட்பு ஒருவர் பொறை.
-
இலவு காத்த கிளி போல....
-
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
-
இல்லது வாராது; உள்ளது போகாது.
-
இல்லறம் அல்லது நல்லறமல்ல.
-
இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)
-
இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.
-
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
-
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
-
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
-
இளங்கன்று பயமறியாது.
-
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
-
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
-
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு!
-
இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
-
இறங்கு பொழுதில் மருந்து குடி.
-
இறுகினால் களி , இளகினால் கூழ்.
-
இரைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
-
இரைத்த கிணறு ஊறும், இரையாத கிணறு (கேணி) நாறும்.
-
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
-
இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே.
-
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
ஈ
-
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்; தீயோனுக்கு உடலெங்கும் விடம்.
-
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
-
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
-
ஈர நாவிற்கு எலும்பில்லை.
-
ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
-
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
உ
-
உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
-
உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
-
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
-
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
-
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
-
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
-
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
-
உடையவன் இல்லாதது ஒரு மொழந்துண்டு.
-
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
-
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
-
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
-
உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
-
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
-
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
-
உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
-
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
-
உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம்.
-
உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது.
-
உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
-
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
-
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
-
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
-
உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
-
உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
-
உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
-
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
-
உரம் ஏற்றி உழவு செய்
-
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
-
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
-
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
-
உலோபிக்கு இரட்டை செலவு.
-
உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.
-
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
-
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
-
உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .
-
உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.
-
உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?
-
உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
-
உள்ளது போகாது இல்லது வாராது.
-
உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்!
-
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
-
உளவு இல்லாமல் களவு இல்லை.
-
உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
-
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
-
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
ஊ
-
ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்.
-
ஊசி முனையில் மூன்று குளம்
-
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
-
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
-
ஊண் அற்றபோது உடலற்றது.
-
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
-
ஊமை சொப்பனம் கண்டாற் போல..
-
ஊருடன் ஒட்டி வாழ்.
-
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
-
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
-
ஊர்க்குருவியைக் கொல்ல இராமபாணமா வேணும்?
-
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
-
ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
-
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.
-
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
-
ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே.
-
ஊர் சனங்களுக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று உபதேசிக்கும் ஒருவன், தன் மனைவி, மக்கள் அவன் ஊர் சனங்களுக்குச் சொன்னதற்கு நேரெதிராக, நடந்துக்கொண்டாலும் கண்டிக்காமல்/கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடும் இயல்பைக் குறித்துச் சொல்லப்படும் சொலவடை
-
ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
-
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
-
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
-
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
-
ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
-
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.
எ
-
எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல.
-
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
-
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
-
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
-
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
-
எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
-
எடுப்பார் கைப்பிள்ளையைப் போல இருக்காதே!
-
எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்..(விடாதே!)
-
எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
-
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
-
எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம்.
-
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.
-
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
-
எண்ணறக்கற்று எழுத்தறப் படித்தாலும், பெண்புத்தி பின்புத்திதான்!
-
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
-
எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
-
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
-
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
-
எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
-
எதார்த்தவாதி வெகுசன விரோதி.
-
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
-
எதிரிக்கு எதிரி நண்பன்.
-
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
-
எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்? (சொலவடை)
-
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
-
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
-
எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
-
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
-
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
-
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
-
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
-
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?
-
எரியும் பந்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதைப்போல...
-
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
-
எருது புண்ணு காக்கைக்குத் தெரியுமா?
-
எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல.
-
எலி அழுதால் பூனை விடுமா?
-
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
-
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
-
எலிக்கறி உடம்புக்கு நல்லதுன்னு பூனை சொல்லுச்சாம்.
-
எலி வளை யானாலும் தனி வளை வேண்டும்.
-
எலியைக் கொல்ல குடியிருக்கும் வீட்டிற்கே தீ வைத்தாற்போல..(வைத்துக்கொள்ளுவார்களா?)
-
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
-
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
-
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
-
எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
-
எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
-
என்றைக்கும் இல்லாத திருநாளாக....(சொலவடை)
-
என்றும் செய்யாத, எதிர்பார்க்காத ஒரு காரியத்தை ஒருவர் செய்யும்பொது பயன்படுத்தும் சொலவடை...எ.கா.,என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்தப்பெரியவர் நம்வீடு தேடி வந்திருக்கிறார்...நம்மாலான உதவிகளைச் செய்வோம்!..
-
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
-
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
-
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
-
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
-
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
-
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
-
எள் என்றால் எண்ணெயாக நிற்பான்/இருப்பான்!
-
கொடுக்கப்பட்ட வேலையை எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகச்சிறப்பாக செய்வான்/செய்யக்கூடியவன் என்றுப் பொருள்... நல்லெண்ணெய் தேவைப்படுபவன் எள்ளைப் பார்த்தவுடன் அது எண்ணெயாக மாறிவிட்டால் எப்படியோ, அப்படி எனக் கொள்ளவேண்டும்
-
எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
-
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
-
எளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு.
-
எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
-
எறும்புந் தன் கையால் எண் சாண்
-
எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?
ஏ
-
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
-
ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.
-
ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்.
-
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
-
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
-
ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்)
-
ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்.
-
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
-
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
-
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
-
ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
-
ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்.
-
ஏழைக்கேத்த எள்ளுருண்டை.
-
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது.
-
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
-
ஏன் நாயேன்னா எட்டி மூக்க நக்குமாம்.
-
ஏற்றவன் குண்டிய எட்டனமுட்டும் தாங்கலாம்
ஐ
-
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
-
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
-
ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
-
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
-
ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
-
ஐப்பசி அடை மழை.
-
ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
-
ஐம்பதிலும் ஆசை வரும்
ஒ
-
ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
-
ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே!
-
ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.
-
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
-
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
-
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
-
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.
-
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
-
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
-
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
-
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
-
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
-
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
-
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
-
ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.
-
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
-
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
-
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
-
ஒற்றுமையே பலம்.
-
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
-
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
-
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
-
ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......
-
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.
-
ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
-
ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.
ஓ
-
ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சிவன் இல்லை.
-
ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
-
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
-
ஓடி வரும் பூனை ஆடி வரும் ஆனை.
-
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
-
ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்....
-
ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
-
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
-
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
-
ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
-
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
-
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
-
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
-
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
ஔ
-
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
க
-
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
-
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
-
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
-
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
-
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
-
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
-
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
-
கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
-
கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது!
-
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
-
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
-
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
-
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
-
கடன் பட்டார் நெஞ்சம் போல...
-
கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்.
-
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.
-
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
-
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
-
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
-
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
-
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
-
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
-
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
-
கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
-
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
-
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
-
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
-
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
-
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
-
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
-
கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
-
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
-
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
-
கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
-
கண் கண்டது கை செய்யும்.
-
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
-
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
-
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
-
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
-
கண்டால் காமாட்சி, காணாவிட்டால் மீனாட்சி.
-
கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம்.
-
கண்ணடிச்சு வராத பொம்பள கையப்படிச்சு இழுத்தா வரவா போறா?
-
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
-
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
-
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
-
கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போல!
-
கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
-
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்.
-
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்தாற் போல
-
கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
-
கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
-
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
-
கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
-
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
-
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
-
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
-
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
-
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
-
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்!
-
கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
-
கரணம் தப்பினால் மரணம்.
-
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
-
கருப்பே அழகு காந்தலே ருசி!
-
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
-
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
-
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
-
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
-
கரும்பு தின்ன கூலி வேண்டுமா?
-
கருத்த பார்ப்பனனையும், வெளுத்த சூத்திரனையும் நம்பாதே !?
-
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
-
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
-
கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன்.
-
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
-
கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
-
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
-
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
-
கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே!!
-
கல்வி அழகே அழகு.
-
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
-
கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
-
கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர்.
-
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
-
கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
-
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
-
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
-
கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல்.
-
களவுக்குப் போறவன் தும்பக் கூடாது, கடை வச்சவன் தூங்கக் கூடாது.
-
களவும் கற்று மர
( இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி)
-
களவும் கத்தும் மற
-
களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள்.
-
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
-
கள் குடித்த குரங்கு போல ...
-
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
-
கள்ள மனம் துள்ளும்.
-
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
-
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
-
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
-
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
-
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.
-
கள்ளுக்கும் காமத்துக்கும் கண்ணில்லை!
-
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
-
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
-
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
-
கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
-
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
-
கனிந்த பழம் தானே விழும்.
-
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
-
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
-
கடமை கண் போன்றது
-
கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார்
கா
-
காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்.
-
காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம்.
-
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
-
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
-
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
-
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
-
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
-
காணி ஆசை கோடி கேடு.
-
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
-
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
-
காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.
-
காகம் திட்டி மாடு சாகாது.
-
காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்.
-
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
-
காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.
-
காகிதப்பூ மணக்காது.
-
காப்பு சொல்லும் கை மெலிவை.
-
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
-
காய்த்த மரம் கல் அடிபடும்.
-
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
-
காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..
-
காரண குருவே காரிய குரு!
-
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
-
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
-
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
-
காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும் ?
-
காலமும் கடல் அலையும் எவருக்கும் காத்திரா.
-
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
-
காலம் பொன் போன்றது
-
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
-
காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
-
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
-
காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம்.
-
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
-
காலைக் கல்; மாலைப் புல்.
-
("காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012)
-
காலை வெய்யில் காலன், மாலை வெய்யில் மருந்து.
-
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
-
காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
-
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
-
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
-
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
-
காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
கி
-
கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
-
கிட்டாதாயின் வெட்டென மற
-
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
-
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
-
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது.
கீ
-
கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
-
கீர்த்தியால் பசி தீருமா?
-
கீறி ஆற்றினால் புண் ஆறும்.
-
கிரீடம் அரசனுக்கு மட்டுமே சொந்தம்.
கு
-
குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
-
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
-
குஞ்சுக் கோழி ஆனாலும் குனிந்து அறுக்க வேண்டும்
-
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
-
குடி குடியக் கெடுக்கும்.
-
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
-
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
-
குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.
-
குட்டக்குட்ட குனியாதே..
-
குட்டி யானையும் குட்டயக் கலக்கும்.
-
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும்.
-
குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
-
குட்டி செத்தா குடியா முழுகப்போகுது?
-
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
-
குடியைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு.
-
குண்டி கொள்ளாம கோவணம் கட்டுனாப்ல.
-
குணத்தை மாற்றக் குருவில்லை.
-
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
-
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
-
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
-
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
-
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
-
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
-
குப்பை உயரும் கோபுரம் தாழும்.
-
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
-
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
-
குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம்.
-
குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
-
குரங்கின் கைப் பூமாலை.
-
குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற் போல....
-
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
-
குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்.
-
குரங்கு சுன்னியை மருந்துக்கு கேட்டால் அது கொம்புக்கு கொம்புக்கு தாவுமாம்!
-
குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
-
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
-
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
-
குருவிக்கேத்த ராமேஸ்வரம்.குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
- இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
-
குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
-
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
-
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
-
குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
-
குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
-
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.
-
குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டாற் போல....
-
குறி வைக்க ஏற்ற ராம சரம்
-
குறைந்த வயிற்றிற்கு கொள்ளுமாம் பலாக்காய்
-
குறைகுடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது.
-
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்கும்.
-
குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
-
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
-
குந்தித் தின்றால் குன்றும் மாளும்!
-
குனிய குனியத்தான் குட்டு விழும்.
-
குண்டுமணிக்குத் (குன்றிமணி) தெரியாதாம் தன் குண்டி கருப்பென்று.
-
கும்பி எரியுது, மீசைக்கு சம்பங்கி எண்ணெய்யா?
-
கும்பி கூழுக்கு அழுததாம், மீசை சம்பங்கி எண்ணெய் கேட்டதாம்.
-
கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி........
கூ
-
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
-
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
-
கூத்தாடி பெண்ணுக்கு சூதாடி கணவன்
-
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
-
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
-
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
-
கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
-
கூழானாலும் குளித்துக் குடி.
-
கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்.
-
கூடாநட்பு கேட்டில் முடியும்.
-
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?)
கெ
-
கெடுக்கினும் கல்வி கேடுபடாது
-
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
-
கெடுவான் கேடு நினைப்பான்
-
கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
-
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
-
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.
-
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.
-
கெட்டும் பட்டணம் சேர்
-
கெண்டையைப் போட்டு வராலை இழு.
-
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
-
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
கே
-
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
-
கெடுவான் கேடு நினைப்பான்.
-
கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
-
கேட்பார் இல்லாவிட்டால் தம்பி சண்டபிரசண்டனாம்!
-
கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
-
கேழ்வரகில் நெய் வழிகிறது என்றால், கேட்பவனுக்கு மதி,சுதி எங்கே போனது?
-
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
-
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
-
கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
கை
-
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை/கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப்போல
-
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
-
கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
-
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
- இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
-
கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
- கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
-
கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
-
கையிலே காசு வாயிலே தோசை
-
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
-
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
-
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
கொ
-
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
-
கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
-
கொடிக்கு காய் கனமா?
-
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
-
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
-
கொடுங்கோலன் ஆட்சியிலே அம் என்றால் சிறை வாசம், உம் என்றால் வனவாசம்.
-
கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
-
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
-
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
-
கொண்டவன் சரியா இருந்தா கூரெ ஏறிக்கூட சண்டெ போடலாம்
-
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
-
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
-
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
-
கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு!
-
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது.
-
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
-
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
-
கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர் கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்.
-
கொன்றால் பாவம், தின்றால் போகும்.
-
கொசு அடிக்க கோடரி வேண்டுமா?
கோ
-
கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
-
கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
-
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
-
கோடி வித்தையும் கூழுக்குத்தான்
-
கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
-
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
-
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
-
கோபம் சண்டாளம்.
-
கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
-
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
-
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
-
கோல் உயரக் குடி உயரும்.
-
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
-
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
-
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
-
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
-
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
-
கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது
-
கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது
-
கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார்.
ச
-
சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
-
சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
-
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி
-
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
-
சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை!
-
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
-
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
-
சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்.
-
சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.
-
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சா
-
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.
-
சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
-
சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
-
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
-
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
-
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
-
சாத்திரம் பாராத வீடும் சமுத்திரம் பார்த்த வீடும் தரித்திரம்.
-
சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
-
சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
-
சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன?
-
சாண் பிள்ளையானாலும்,ஆண் பிள்ளை.
-
சாண் ஏற முழம் சறுக்குகிறது.
சி
-
சிங்காரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.
-
சித்தன் போக்கே சிவன் போக்கு.
-
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
-
சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்
-
சித்திரையில் செல்வ மழை.
-
சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
-
சின்ன நாய எறண்டுவானேன் செருப்படி வாங்குவானேன்.
-
சிரிக்கிற பெண்ணையும், அழுகிற ஆணையும் நம்பாதே!
-
சிரைத்தாலும் தலையெழுத்து அழியாது/போகாது!
-
சிவபூசையில் கரடி புகுந்தாற் போல!
-
சிறியோரெல்லாம் சிறியோரல்ல, பெரியோரெல்லாம் பெரியோருமல்ல.
-
சிறுதுளி பெரு வெள்ளம்.
-
சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.
-
சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ்.
சு
-
சுக துக்கம் சுழல் சக்கரம்.
-
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை!
-
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
-
சுட்ட சட்டி அறியுமா சுவை.
-
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
-
சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
-
சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
-
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
-
சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
-
சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்தானாம்.
-
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
-
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. (சும்மா கிடக்குற சங்க ஊதி கெடுத்தானாம் பண்டாரி)
-
சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல.......
-
சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
-
சுவர் இருந்தாதானெ சித்திரம் வரெய முடியும்.
-
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
சூ
-
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்)
-
சூடு கண்ட பூனை அடுப்படிக்கு செல்லாது.
-
சூடு மண்ட பூனை பாலை குடிக்காது.
-
சூதும் வாதும் வேதனை செய்யும்.
செ
-
செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
-
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
-
செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
-
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
-
செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
-
செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம்.
-
செத்தும் கொடுத்தான் சீதக்காதி.
-
செய்வன திருந்தச் செய்.
-
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
-
செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
-
செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?
-
செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.
-
செல்லுமிடம் சினம் காக்க.
-
செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
-
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
-
செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
-
செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
-
செய்யும் தொழிலே தெய்வம்.
-
சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
சே
-
சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
-
சேலை கட்டிய மாதரை நம்பாதே !
-
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
-
சேற்றிலே செந்தாமரை போல.
சை
-
சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
சொ
-
சொந்தக் காசில் சூனியம் வெச்சிக்கறது போல.
-
தவறு என்று நன்குத் தெரிந்தாலும், தனக்கு தனிப்பட்ட உபயோகம் ஒன்றுமில்லை என்றுத் தெரிந்தும் ஒரு காரியத்தைச் செய்ய முற்பட்டு தேவையற்ற/வீணான ஆபத்து, வம்பு தும்பு, சண்டை, சச்சரவு அகியவைகளில் சிக்கித் தவிப்பதைக் குறிக்கும் பழமொழி...
-
சொத்து பெரிசில்ல சொல்லுதான் பெரிசு
-
சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
-
சொல் அம்போ வில் அம்போ?
-
சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
-
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
-
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
-
சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
-
சொல்வல்லவனை வெல்லல் அரிது.
-
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
-
சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
-
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
சோ
-
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
-
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
-
சோறு கண்ட எடம் சொர்க்கம் திண்ண கண்ட எடம் தூக்கம்.
-
சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
-
சோழியன் குடுமி சும்மா ஆடாது!
த
-
தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்வரா?
-
தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
-
தங்கக்குடத்திற்கு சந்தனமென்ன? பொட்டென்ன?
-
ஏற்கனவே மிகச்சிறந்த விடயங்களுக்கு, அலங்காரம் தேவையில்லை என்னும் பொருள்...
-
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
-
தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
-
தட்டத் தட்ட தட்டான், படிக்க படிக்க வாத்தியாரு.
-
தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
-
தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ?
-
தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
-
தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
-
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
-
தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
-
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
-
தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
-
தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
-
தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
-
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
-
தரித்திரனுக்கு பவிசு (வாழ்வு) வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்.
-
தருமம் தலைகாக்கும்.
-
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
-
தலை இருக்க வால் ஆடலாமா ?
-
தலையைப் பார்த்து கல்லைப் போடு!
-
கல் என்பது தோசைக்கல்லைக் குறிக்கும்..தலை என்பது ஆள்/நபர்...சாப்பிட ஆள் இருந்தால் மட்டுமே கல்லைப் போட்டு தோசை சுடு அதாவது தேவை/அவசியம் இல்லாமல் செலவு செய்யாதே என்னும் பொருள்...
-
தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
-
தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
-
தலெ எழுத்து தலெய செரச்சா போவுமா?
-
தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம்!
-
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
-
தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும்.
-
தலைவலி போய் திருகுவலி வந்ததாம்!
-
ஒரு பிரச்சினையை மிகுந்த சிரமப்பட்டு போக்கிக்கொள்ளும்போது நம்மை அறியாமலேலே மற்றொரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும்போது பயன்படுத்தப்படும் பழமொழி...ஒரு பிரச்சினையை வெகு எச்சரிக்கையாக பின்/எதிர் விளைவுகளை யோசித்துக் கையாளவேண்டும் என்பதை உணர்த்தும்...
-
தனக்கு மிஞ்சியது தான் தானமும் தருமமும்.
-
தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
-
தவளை தன் வாயாற் கெடும்.
-
தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
-
தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!
-
தன் வினை தன்னைச் சுடும் !
-
தன்னூர் கிழக்கே, தங்கினவூர் மேற்கே, வேண்டாம் தெற்கும், வடக்கும்.
-
ஒருவர் தூங்கும்போது எந்தத் திசையில் தலையை வைத்துத் தூங்கவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது...
-
தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும்.
-
தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!!
-
தனக்கு தவிடு இடிக்க மாட்டான், வூருக்கு இரும்பிடிப்பான்.
-
தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும்.
-
தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!
-
தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு)!
-
தாயில் சிறந்த கோயில் இல்லை.
தா
-
தாட்சண்யம் தன நாசம்.
-
தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
-
தாயும், மகளுமே யானாலும் வாயும் வயிறும் வேறு, வேறுதான்!
-
என்னதான் நெருக்கமாகவும், அன்னியோன்னியமாகவும் இருந்தாலும் அவரவர் தேவைகள் வேறுவேறானவை/ மாறுபட்டவை...ஒருவர் தன்பசிக்கு உணவு உண்டால் மற்றவர் வயிறு நிறைந்து அவர் பசி அடங்காது என்றுப்பொருள்...
-
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.
-
தாய்க்குப்பின் தாரம்.
-
தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று.
-
தாயில்லா தகப்பன் தாயாதி.
-
தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் உண்மையாகும்
-
தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
-
தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
-
தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
-
தாயோடு அறுசுவை உணவு போம்.
-
தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல.
-
தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு.
-
தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.
-
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
-
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
-
தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும்.
-
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பான்!
-
தன் வூட்டு நெருப்புன்னு முத்தம் கொடுக்க முடியுமா?
-
தானத்தில் சிறந்தது நிதானம்.
-
தானா பழுக்குறத தடி கொண்து அடிக்கணுமா?
-
தானே கனியாதக் காயைத் தடிக்கொண்டு அடித்தாலா கனியும்?
-
தானம் கொடுத்த மாட்ட பல்லப்புடுச்சு பதம் பாத்த கதெயா.
-
தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்.
தி
-
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை
-
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!
-
திருவாரூரு தேவடியாள் தேர்ந்த கைக்காரி, பாலில்லாம புள்ளை வளர்ப்பாள் பலே கைக்காரி!
-
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்)
-
திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல....
-
திருடனுக்கு தேள் கொட்டினாற் போல...
-
திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல...
-
திண்ணைத்தூங்கி முண்டத்துக்கு பன்னீர்கண்ட மீசையாம்!
-
தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்.
-
தின்ன மனசு தேடுமாம், உண்ண உடம்பு உருகுமாம்.
-
தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!..
-
தேளுக்கு மானியம் கொடுத்தா நொடிக்கு நூறுதடவ கொட்டுமாம்.
தீ
-
தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதைப்போல!
-
தீதும் நண்றும் பிறர் தற வாரா
து
-
துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா?
-
துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
-
துட்டனைக் கண்டால் தூர விலகு...
-
துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை.
-
துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
-
துரும்பும் பல் குத்த உதவும்.
-
துறவிக்கு வேந்தனும் துரும்பு.
தூ
-
தூண்டிக்காரனுக்கு தக்க மேல கண்ணு.
-
தூய மனதை திடுக்கிட வைத்தால் ஐயம் இல்லாமல் அனைத்தும் வரும்.
தெ
-
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? (கட்டியதாம்)
-
தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல்
தே
-
தேங்கா தின்னது ஒருத்தன் தெண்டங் கட்டனது ஒருத்தன்.
-
தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்.
-
தேனெடுக்றது ஒருத்தன் பொறங்கைய நக்றது ஒருத்தன்.
-
தேளுக்கு கொடுக்கில் விஷம் தேவடியாளுக்கு உடம்பு பூராவும் விஷம்,
தை
-
தை பிறந்தால் வழி பிறக்கும்.
-
தை மாதம் தரையும் குளிரும்.
-
தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்.
தொ
-
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
தோ
-
தோடு தொலஞ்சா தேடமாட்டங்க, சொரை தொலைஞ்சா தேடுவாங்க.
-
தோண்டக்குறுணி துக்க முக்குறுணி.
ந
-
நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
-
நக்குமங்கலம் நக்கி நாறமங்கலம் குடி போனாளாம்..
-
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
-
நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி
-
நடந்தால் நாடும் உறவாகும், படுத்தால் பாயும் பகையாகும்.
-
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
-
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
-
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
-
நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
-
நம்ம ஊட்டு வெளக்குன்னு முத்தம் கொடுக்க முடியுமா?
-
நம்புறவனுக்கு மகராசா நம்பாதவனுக்கு எமராசா.
-
நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
-
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
-
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
-
நமைச்சல் எடுத்தவன்தான் சொரிந்துக்கொள்ள வேண்டும்!
-
நயத்திலாகிறது பயத்திலாகாது.
-
நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும்.
-
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
-
நரி எடம் போனா என்ன வலம் போனா என்ன நம்ம மெலெ விழுந்து புடுங்காம இருந்தா சரி.
-
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
-
நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
-
நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
-
நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
-
நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
-
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
-
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
-
நல்லவனா கெட்டவனா என்பது செத்தால்தான் தெரியும்.
-
நல்லா கீது உந்நாயம், மண்டைலகீது காயம்.
-
நல்லார் பொல்லாரை நடக்தையால் அறியலாம்.
-
நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்(லு).
-
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
-
நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயாதே.
-
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனை.
-
நன்மை கடைபிடி.
நா
-
நா அசைய நாடு அசையும்.
-
நாக்க தாண்டினா நரகல்.
-
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
-
நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
-
நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
-
நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
-
நாய் இருக்கிற சண்டை உண்டு.
-
நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.
-
நாய் விற்ற காசு குரைக்குமா?
-
நாய ஏவுனா அது தான் வாலை ஏவுது.
-
நாவால் பிறக்கும் நன்மையும் தீமையும்.
-
நாலாயிரம் இல்லையெனில் நம் பெருமான் இல்லை.
-
வைணவச் சமயத்தினருக்கு நாலாயிர திவ்விய பிரபந்தம் என்னும் நூல் எவ்வளவு புனிதமான, முக்கியமான நூல் என்பதைத் தெரிவிக்கும் மொழி...நம்பெருமான் என்பது திருவரங்கத்தில் கோவில்கொண்டுள்ள, வைணவக்கடவுளான அரங்கனாதனைக் குறிக்கும்...திருவரங்கத்து அரங்கனாதனின் கோவிலே, வைணவர்களின் எல்லாக் கோயில்களிலும் முதலாவதாகும்...
-
நாலாறு கூடினால் பாலாறு.
-
நாளுக்குநாளு நகர்ந்ததடி அம்மா (டி). சொலவடை
-
நாள் செய்வது நல்லார் செய்யார்.
-
நரம்பில்லா நாக்கு நாலும் பேசும்.
-
நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
-
நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.
-
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
-
நாலு பேர் கூடற எடத்துல நல்ல வெளக்கு, விடிய விடிய இலுப்ப வெளக்கு.
-
நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.
-
நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி.
-
நான்கு பிள்ளை பெற்றவருக்கு நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியில் சோறு.
நி
-
நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
-
நித்திய கண்டம் பூரண ஆயுசு.
-
நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
-
நித்திரை சுகம் அறியாது.
-
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
-
நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
-
நிறை குடம் நீர் ததும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
-
நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
நீ
-
நீ எதனால் அளக்கின்றாயோ அதனால் நீ அளக்கப்படுவாய்!
-
நீந்த மாட்டாதவனை ஆறுகொண்டு போம்.
-
நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
-
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
-
நீர் மேல் எழுத்து போல்.
-
நீரடிச்சு நீர் வெலகுமா?
-
நீரானாலும் மோர், பேயானாலும் தாய்.
-
நீரில்லா நெற்றி பாழ்.
-
நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
-
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
நு
-
நுங்கு குடிச்சவன் ஓடிப்பொயிட்டானாம், குதம்பைய கடிச்சவன் மாட்டிக்கிட்டானாம்.
-
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
-
நுணலும் தன் வாயால் கெடும்.
நூ
-
நூல் கற்றவனே மேலவன்.
-
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
-
நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
-
நூற்றைக் கொடுத்தது குறுணி.
நெ
-
நெய் முந்தியோ திரி முந்தியோ.
-
நெய்யை உருக்கியுண், நீரைச்சுருக்கியுண், மோரைப்பெருக்கியுண்.
-
நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு.
-
நெருப்பின்மீது ஈ மொய்க்குமா?
-
நெருப்பில்லாமல் புகையாது!
-
நெருப்பில்லாம பொகயுமா?
-
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
-
நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
-
நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
-
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
-
நேற்று உள்ளார் இன்று இல்லை.
நை
-
நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
நொ
-
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
-
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நோ
-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
-
நோய் கொண்டார் பேய் கொண்டார்.
-
நோய்க்கு இடம் கொடேல்.
ப
-
பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
-
பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
-
பக்கச் சொல் பதினாயிரம்.
-
பசியுள்ளவன் ருசி அறியான்.
-
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
-
பசித்தபின் புசி.
-
பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
-
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
-
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
-
படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில்.
-
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
-
படிப்பது பாகவதம், இடிப்பது பெருமாள் கோயில்.
-
தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் செயல்படுவோரைக் குறித்துச் சொல்லப்படுவது...எப்படி வைணவர்களுக்குப் புனித நூலான பாகவதத்தைப் போற்றிப் படிப்பவர், அதே வைணவக்கோவிலை (பெருமாள்) இடித்து அழிக்க முற்படுவதைப்போல என்னும் பொருளில் பயனாகிறது...
-
படிக்குற வரைக்கும் புள்ள பயிறு பயிறுன்னாச்சாம்; படிச்சபெறவு பசறு பசறுன்னுச்சாம்.
-
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
-
படையிருந்தால் அரணில்லை.
-
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
-
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். (Misery loves company)
-
பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
-
பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
-
பட்டால் தெரியும் பட்ட வலி.
-
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
-
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
-
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்கு என்ன வெலைங்றான்.
-
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
-
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தாற் போல.
-
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
-
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
-
பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
-
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
-
பணம் உண்டானால் மணம் உண்டு.
-
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
-
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
-
பணம் பாதாளம் மட்டும் பாயும்.
-
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
-
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
-
பண்டிதன் மகன் பரம சூனியம்.
-
பண்டம் ஒரிடம் பழி பத்திடம்.
-
பதறாத காரியம் சிதறாது.
-
பதறிய காரியம் சிதறும் (Haste is waste)
-
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
-
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
-
பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி
-
பல்லு போனா சொல்லு போச்சு.
-
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
-
பரட்டை பால் வார்க்கும், சுருட்டை சோறு போடும்.
-
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
-
பரிசாரகன் நம்மாள் ஆனால், எங்கு உட்கார்ந்தால் என்ன?
-
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
-
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
-
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
-
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
-
பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
-
பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt)
-
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
-
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
-
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
-
பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
-
பழுத்த மரம்தான் கல்லடி படும்.
-
பழம் நழுவிப்பாலில் விழுந்தாற்போல!
-
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு வொதவாது.
-
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
-
பனி பெய்து குளம் நிரம்பாது.
-
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
-
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
-
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
-
பனை மர நிழலும் சரி, மறப்பய உறவும் சரி.
-
பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே.
-
பன்றிக்குப் பின்னால் போகிற கன்றும் கெடும்.
-
பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுமாம்.
-
பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
-
பக்கத்து வீட்டு சாம்பாருக்கு ருசி அதிகம்.
-
பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது?
பா
-
பாக்க ஒரு தரம் கும்புட ஒரு தரமா?
-
பாட்டி சொல்லைத் தட்டாதே.
-
பாண்சேரிப் பற்கிளக்கு மாறு (பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.)
-
பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு.
-
பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு .
-
பாம்பின் கால் பாம்பறியும்.
-
பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது.
-
பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
-
பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்.
-
பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.
-
பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?
-
பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.
-
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
-
பாரியாள் ரூபவதியானால் தன் சத்துரு.
-
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
-
பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?
-
பாலைக் குடித்ததுமட்டு மல்லாமல் பூனை பானையை வேறுடைத்ததாம்!
-
பானை பிடித்தவள் பாக்கியசாலி.
பி
-
பிஞ்சில வளெயாதது கம்புல வளெயுமா?
-
பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!
-
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டக் கதையாக...
-
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார்.
பு
-
புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி.
-
புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
-
புத்திமான் பலவான்.
-
புலி அடிச்சுதா? கிலி அடிச்சுதா?
-
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
-
புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்!
-
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.
-
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
-
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
-
புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்.
பூ
-
பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போய்விடுமா?
-
பூனை குட்டியை மாத்தினாற்போல.
-
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
-
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
-
பூவிற்றகாசு மணக்குமா?
-
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
-
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
-
புயலுக்குப் பின்னே அமைதி.
-
பூனை உள்ள இடத்தில் எலி பேரன் பேத்தி எடுக்குது.
-
பூ வின் மற்றோருப் பெயர் பெண்.
பெ
-
பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
-
பெண் என்றால் பேயும் இரங்கும்.
-
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
-
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
-
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
-
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
-
பெண்ணுக்கு இடம் கொடேல்.
-
பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!!
-
பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்....
-
பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்
-
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
-
பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
-
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
-
பெற்றால் தான் பிள்ளையா?
-
பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு.
-
பெண்ணும் போதை தரும், கள்ளும் போதை தரும் இதற்கு தான் நாம் பெண்கள் என்று கூறுகிறோம்
-
புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்...
பே
-
பேசப் பேச மாசு அறும்.
-
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
-
பேராசை பெருநட்டம்.
-
பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்.
-
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
-
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
-
எவ்வளவு மேலான/புனிதமான விடயங்களும் தீயவன்/கொடுங்கோலன் ஆட்சிபுரியும்போது அவை அந்த நாட்டில் கெட்டு,அழிவுறும் என்பது பொருள்.
-
பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்.
பொ
-
பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
-
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
-
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
-
பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை.
-
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
-
பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
-
பொறுமை கடலினும் பெரிது.
-
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
-
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
-
பொன் குடத்திற்கு பொட்டிட்டா பார்க்கணும்?
-
பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல...
போ
-
போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்.
-
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
-
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
-
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
-
போகாத ஊருக்கு வழி காட்டுகிறான்/வழி சொல்லுகிறான்.
-
செயல்படுத்த முடியாத காரியங்கள்/செயல்களைப்பற்றி ஒருவர் பேசும்பொது/சொல்லும்போது, எதிர்த் தரப்பார் கையாளும் பழமொழி..ஒரு ஊரே இல்லை ஆனால் அதற்குப்போக வழி காட்டுகிறான் என்பதாகும்...
ம
-
மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
-
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
-
மடை திறந்த வெள்ளம் போல ......
-
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
-
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
- இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு
-
மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?மண்டையுள்ள வரை சளி போகாது.
- மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு.
-
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பொல்லாது.
-
மணி அடித்தால் சோறு, மயிர் முளைத்தால் மொட்டை.
-
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
-
மதியாதார் வாயிலை மிதியாமை கோடி பெறும்.
-
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
-
மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
-
மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்
-
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
-
மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
-
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
-
மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
-
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
-
மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
-
மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம்.
-
மலை ஏறினாலும் மச்சினன் உதவி தேவை.
-
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
-
மலை வாயில பொழுது, மக்கள் வாயில சோறு.
-
மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
-
மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
-
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
-
மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல.
-
மவுனம் கலக நாசம்
-
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
-
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
-
மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
-
மனமுரண்டிற்கு மருந்தில்லை.
-
மனம் உண்டானால் இடம் உண்டு.
-
மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.
-
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
-
மனம் போல வாழ்வு.
-
மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்!
-
அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது...
-
மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
-
மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை.
-
மணலை கயிறாக திரிப்பது போல. ..
-
மந்திரத்தால் மாங்காய் விழாது!
-
மழை விட்டும் தூவானம் விடவில்லை!
மா
-
மாதா பிதா செய்தது மக்களைக் காக்கும்.
-
தாயும் தந்தையும் செய்த நற்செயல்களால் விளைந்த புண்ணியப் பலன்கள் அவர்களை மட்டுமல்லாது, அவர்கள் பெற்றப் பிள்ளைகளையும் காக்கும் என்பது பொருள்
-
மாடம் இடிந்தால் கூடம்.
-
மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்காது!
-
மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா?
-
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
-
மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
-
மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
-
மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி
-
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
-
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
-
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
-
மாமியார்க்குச் சாமியார் இவள்.
-
மாமியார் செத்ததற்கு மருமகள் அழுதது போல்.
-
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
-
மாமியார் உடைத்தால் மண்கலம், மாட்டுப்பெண் உடைத்தால் பொன்கலம்!
-
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
-
மாரடித்த கூலி மடி மேலே.
-
மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
-
மாரி யல்லது காரியம் இல்லை.
-
மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்)
-
மாற்றானுக்கு இடங் கொடேல்.
-
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!
-
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
-
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
-
மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.
மி
-
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
-
மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
-
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
-
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
-
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மீ
-
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
-
மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?
-
மீன் வித்த காசு நாறுமா?
-
மீ தூண் விரும்பேல்.
மு
-
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?
-
முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
-
முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
-
முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்.
-
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
-
முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)
-
முட்டிக்கு போனாலும் மூன்று பேர் ஆகாது.....(முட்டி என்றால் பிச்சை)
-
முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!
-
முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு?
-
முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
-
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல.
-
முகத்துக்கு முகம் கண்ணாடி
-
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
-
முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா?
-
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல!..
-
முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.
-
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
-
முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது.
-
முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
-
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
-
முதல் கோணல் முற்றுங் கோணல்
-
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
-
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
-
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
-
முயற்சி திருவினை ஆக்கும்.
-
முருங்கை பருத்தால் தூணாகுமா?
-
முள்ளு முனையிலே மூணு குளமாம்!
-
மிகச் சிறிய பிரச்சினை/விடயத்திலும், சுமுகமாக இல்லாமல், ஒருவருக்கொருவர் முரண்டுப் பிடித்துக்கொண்டு ஒற்றுமையில்லாமல் பிரிந்துக் கிடப்பது என்றுப் பொருள்...முள்ளின் முனை எவ்வளவு சிறியது!...அதில் மூன்று பின்னங்களை உண்டாக்குவது எப்படி சரியல்லவோ அப்படி என்பதாம்...
-
முள்ளுமேல் சீலைபோட்டால் மெல்ல மெல்லதான் வாங்கவேண்டும்.
-
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
-
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
-
முன் வைத்த காலைப் பின் வைக்காதே!
-
முன்ன பேயாமல் கெடுக்கும், பின்ன பேஞ்சு அழிக்கும்.
-
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மூ
-
மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
-
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
-
மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.
-
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
-
மூர்க்கனுக்கு செய்யாதே உபதேசம்.
-
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.
மெ
-
மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
-
மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
மே
-
மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
-
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்
மொ
-
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல!
-
மொழி தப்பினவன் வழி தப்பினவன்
மோ
-
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
-
மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.
-
மெளனம் மலையைச் சாதிக்கும்.
ய
-
யதார்த்தவாதி வெகுசன விரோதி.
-
உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத விரோதி போலாகிறான் என்பது கருத்து.
யா
-
யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
-
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
-
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
-
யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.
-
யானைப் பசிக்கு சோளப் பொரி.
-
யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).
யோ
-
யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.
ரா
-
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.
-
ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி.
வ
-
வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
-
வட்டி ஆசை முதலுக்கு கேடு.
-
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
-
வடக்கே கருத்தால் மழை வரும்.
-
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.
-
வணங்கின முள் பிழைக்கும்.
-
வணங்குன புல்லு தைக்கும்.
-
வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான்.
-
வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
-
வந்த வேலெயப் பாக்காம பந்தக்காலெ ஆட்னானான்.
-
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
-
வந்தா வரவுல வை வராட்டி செலவுல வை.
-
வரவு எட்டணா செலவு பத்தணா.
-
வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
-
வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)
-
வருந்தினால் வாராதது இல்லை.
-
வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
-
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
-
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
-
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
-
வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே?
-
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
-
வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது
-
வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
-
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் (பாய்ந்தது)போல.....
-
வளவனாயினும் அளவறிந் தளித்துண்
வா
-
வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
-
வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை.
-
வாய்ச்சொல் தலசுமை (வாய்ச்சொல் தலமூட்ட)
-
வாயிலிருக்கிறது வழி!
-
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.(பிழைத்துக்கொள்ளும்)
-
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
-
வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
-
வாய்க்கேற்ற கை
(வெறும் பேச்சு மட்டுமல்ல, பேசுமளவுக்கு காரியங்களும் செய்வர் எனப்பொருள்)
-
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
-
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
-
வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்.
-
வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்குமுண்டோ?
-
வாழையடி வாழையாக .........
-
வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாய் .....
-
வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது
வி
-
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
-
விரலுக்குத் தகுந்த வீக்கம்.
-
விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
-
விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
-
விடிய விடிய வெகுமானம் விடிஞ்சா அவமானம்.
-
விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்.
-
விதி எப்படியோ மதி அப்படி.
-
விதியை மதியால் வெல்லலாம்.
-
வித்தைக்கு அழிவில்லை.
-
விந்து விட்டான், நொந்து கெட்டான்!
-
மிதமிஞ்சிய சம்போகத்தில் ஈடுபட்டு வீரியத்தை அதிக அளவில் இழப்பவன், பற்பல உடற் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிகவருந்துவர் என்றுப் பொருள்
-
வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
-
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
-
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
-
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
-
விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
-
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
-
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
-
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
-
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்
-
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
-
விற்கப்போனால் குதிரை விலை, வாங்கப்போனால் ஆனை விலை.
வீ
-
வீட்டுக்கு வீடு மண் வாசற்படி
-
வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்!
-
வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது.
-
வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது.
-
வீம்புக்கு ஊம்பினாற் போல!
வெ
-
வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான்.
-
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.
-
வெட்றவன தான ஆடு நம்பும்.
-
வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல....
-
வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!
-
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
-
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
-
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல....
-
வெயிலின் அருமை நிழலில் தெரியும்!
-
வெளங்தாவன் வேலைக்கு போனான்னாம் வேலெ ஆப்புட்டுச்சாம் கூலி ஆப்புடலயாம்.
-
வெள்ளத்த தான ஈ மொய்க்கும்.
-
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
-
வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
வே
-
வேலிக்கு ஓணான் சாட்சி.
-
வேலிலா போற ஓணான வேட்டிக்குள்ள உட்டாப்ல.
-
வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு.
-
வேலியே பயிரை மேய்ந்தாற் போல...
-
வேலை வரும்போதுதான் பேல வரும்.
-
வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!
-
வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
-
வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்-னு பேரு வச்சது மாதிரி...
-
வேதாரண்யம் விளக்கழகு
-
வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.
-
வேளைக் கள்ளிக்குப் பிள்ளை சாக்கு.
வை
-
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
-
வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
-
வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
-
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
-
வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.